தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மதிமுக குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக குழுவினர், திமுகவிடம் மாநிலங்களவை சீட் கேட்டுள்ளோம். கடந்த முறையைவிட கூடுதல் தொகுதி கேட்டுள்ளோம். தொகுதிகளை குறைத்துக்கொள்ளுமாறு திமுக கேட்கவில்லை.
பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும். எத்தனை தொகுதிகள் என்பதை பின்னர் தெரிவிக்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டனர். கடந்த பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது.
ஆனால் வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடப்போவதாக மதிமுக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வழக்கம்போல இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதலில் பேச்சு நடத்தப்பட்டது. தொடர்ந்து, திங்கள்கிழமை மனிதநேய மக்கள் கட்சி, மதிமுகவுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழு திங்கள்கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.
Summary
The MDMK group held talks with the DMK group led by T.R. Balu at Anna Arivalayam in Chennai today regarding seat sharing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சு! இன்று கையெழுத்தாகிறது!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


