தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

விளவங்கோடு தொகுதியில் போட்டியிடப்போவது யார்? முற்றும் மோதல்

விளவங்கோடு தொகுதிக்கு காங்கிரஸ் - சிபிஎம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

News image
Updated On :20 மார்ச் 2024, 12:47 pm IST

கன்னியாகுமரி: மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், அதே நாளில், தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இடைத்தேர்தலுக்கு தயாராகிவரும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போர் மூண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளது. இங்கு நான்காவது முறையாக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொள்ள மும்முரம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சோ்ந்ததால் அவா் தனது சட்டப்பேரவை உறுபிப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19ல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளன்றே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த விளவங்கோடு தொகுதியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கட்சி சார்பில், விளவங்கோடு தொகுதியை கேட்டுள்ளோம் என்றார்.

முன்பு விளவங்கோடு தொகுதியில் கூட்டணி வைத்தாலும், தனித்து போட்டியிட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்துள்ளது. அப்போது, விளவங்கோடு தொகுதி, கட்சியின் பலம்வாய்ந்த தொகுதியாக இருந்தது. அதனால், தற்போது கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் விளவங்கோடு தொகுதியை கேட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதிகாங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அப்போதுதான், மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கன்னியாகுமரியில் மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2006-ம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் விஜயதரணி வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து 15 ஆண்டுகாலம் எம்எல்ஏவாக இருந்த பதவி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில்தான், விளவங்கோடு தொகுதியை பெறுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கரள். இது குறித்து ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுக்காது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே. செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். வரும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வேட்பாளரை நிறுத்தும். 12 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இன்னும் ஒரு சில நாள்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.