அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பர்கூர் நெகிழி கிடங்கில் தீ விபத்து

இந்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

News image
Updated On :21 மார்ச் 2024, 3:09 am

DIN

கிருஷ்ணகிரி: பர்கூர் நெகிழி பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கப்பல்வாடி கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமனின் மகன் கதிரேசன் என்பவர், நெகிழி, மரத்திலான கைவினைப் பொருள்களை விற்பனை செய்து வருகிறார். விற்பனை செய்யும் கடையின் அருகே, கிடங்கை அமைத்து பொருள்களை வைத்திருந்தார்.

தனது கிராமத்தில், திருவிழா நடைபெறுவதால், கடந்த மூன்று நாள்களாக கடையை அவர் திறக்கவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை இரவு, இவரது கிடங்கில் இருந்து கரும் புகை வருவதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், காற்று வீசியதால் தீ பற்றி எரிய தொடங்கியது.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி, பர்கூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மூன்று வாகனங்களில் வந்து, தீயை முற்றிலும் கட்டுப்படுத்தி, மேலும் தீ பரவாமல் தடுத்தனர். சுமார் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது.

Story image

இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து காரணமாக, பர்கூரில், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால், நகர் இருளில் மூழ்கியது.

இந்த விபத்து குறித்து, தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.