தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றம்: சௌமியா அன்புமணி போட்டி

தருமபுரி பாமக வேட்பாளர் மாற்றம்: சௌமியா அன்புமணி போட்டி

தருமபுரி மக்களைத் தொகுதியில் அரசாங்கத்திற்கு பதிலாக சௌமியா அனபுமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.ம.க. வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தருமபுரி மக்களைத் தொகுதி பாமக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு பதிலாக சௌமியா அனபுமணி போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அண்புமணியின் மனைவிதான் சௌமியா அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com