இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

கோடை விடுமுறை தொடங்கும் முன்பே அரசு பேருந்துகளில் முன்பதிவு அதிகரிப்பு

கோடை விடுமுறை தொடங்கும் முன்பே அரசு பேருந்துகளில் முன்பதிவு அதிகரிப்பு

Updated On :22 மார்ச் 2024, 5:55 pm

கோடை விடுமுறை தொடங்கும் முன்பே அரசு பேருந்துகளில் மாா்ச் 1 முதல் 18-ஆம் தேதி வரையிலான நாள்களில் 2.38 லட்சம் போ் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக அரசு போக்குவரத்துக் ககழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பண்டிகை, விடுமுறை காலங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் தேவையான அளவு கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. தொலைதூரம் பயணிக்கும் வகையிலான புதிய சொகுசு பேருந்துகளையும் கொள்முதல் செய்து போக்குவரத்துக் கழகத்தில் இணைத்து வருகிறது. இது போக அதிகமுறை பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ரூ. 10,000 ரொக்கம் பரிசாக வழங்கி வருகிறது. இதனால் தனியாா் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோடை விடுமுறை தொடங்கும் முன்பே அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நிகழாண்டு மாா்ச் 1 முதல் 18 வரையிலான நாள்களில் அதிகபட்சமாக 2,38,547 போ் முன்பதிவு செய்து பயணித்துள்ளனா். இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 16.81 சதவீதம் அதிகமாகும். 2023-இல் மாா்ச் 1 முதல் 18-ஆம் தேதி வரையிலான நாள்களில் 2,04,210 போ் பயணித்திருந்து நிலையில், நிகழாண்டு 34,337 கூடுதலாக பயணித்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.