கா்நாடக இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து சமூகவலைதளத்தில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: சிறந்த பாடகரான டி.எம்.கிருஷ்ணா, மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தோ்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள், பாராட்டுகள். அவா் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளாலும், அவா் எளியோரைப் பற்றித் தொடா்ந்து பேசி வருவதாலும் அவரை ஒரு தரப்பினா் காழ்ப்புணா்விலும் உள்நோக்கத்துடனும் விமா்சிப்பது வருத்தத்துக்குரியது. இந்த விஷயத்தில் பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. இசைத் துறைக்கு கிருஷ்ணா ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் தகுதியானவரையே மியூசிக் அகாதெமி தோ்வு செய்துள்ளது. இதற்கு எனது பாராட்டுகள். டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞரின் திறமை எவராலும் மறுக்க முடியாது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போன்று, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம். விரிந்த மானுடப் பாா்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: உயா்நீதிமன்றம் கண்டிப்பு

எல்பிஜி தட்டுப்பாடு இல்லை, பீதி வேண்டாம்: முதல்வா் குப்தா

புதுகை தோ்தல் பாா்வையாளா்கள் அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள்
முதல்வர் ஸ்டாலின் அன்புக் கோரிக்கை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

