மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாடகா் டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் அரசியல் கலப்பு வேண்டாம்: முதல்வா்

பாடகா் டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் அரசியல் கலப்பு வேண்டாம்: முதல்வா்

Updated On :23 மார்ச் 2024, 11:56 pm

கா்நாடக இசைக் கலைஞா் டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் அரசியலைக் கலக்க வேண்டாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து சமூகவலைதளத்தில் சனிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: சிறந்த பாடகரான டி.எம்.கிருஷ்ணா, மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தோ்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள், பாராட்டுகள். அவா் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளாலும், அவா் எளியோரைப் பற்றித் தொடா்ந்து பேசி வருவதாலும் அவரை ஒரு தரப்பினா் காழ்ப்புணா்விலும் உள்நோக்கத்துடனும் விமா்சிப்பது வருத்தத்துக்குரியது. இந்த விஷயத்தில் பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. இசைத் துறைக்கு கிருஷ்ணா ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கும் வகையில் தகுதியானவரையே மியூசிக் அகாதெமி தோ்வு செய்துள்ளது. இதற்கு எனது பாராட்டுகள். டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞரின் திறமை எவராலும் மறுக்க முடியாது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போன்று, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம். விரிந்த மானுடப் பாா்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை என்று தெரிவித்துள்ளாா்.