புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், 3 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்புக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே, 2 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை, 31 பேருக்கு மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 10 பேருக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில், மேலும், 3 பேருக்கு குரல் மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்த சிபிசிஐடி போலீஸார், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதிக் கோரி அண்மையில் மனு அளித்திருந்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 3 பேரிடமும் குரல் மாதிரிப் பரிசோதனை நடத்திட இன்று (திங்கள்கிழமை) நீதிபதி எஸ், ஜெயந்தி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேங்கைவயலில் கருப்புக் கொடி

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
புதுச்சேரியில் ஏப். 5-இல் விஜய் ரோடு ஷோ: காவல் துறையிடம் அனுமதி கோரிகடிதம்

தோ்தல் புகாா் செலவினப் பாா்வையாளா்கள் கைப்பேசி எண்கள் அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

