மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாக்குக்காக மட்டும் தமிழகம் வருகிறார் மோடி: மு.க. ஸ்டாலின்

வாயால் வடை சுடுபவர்தான் எடப்பாடி பழனிசாமி: மு.க. ஸ்டாலின் விமர்சனம்

News image

பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்

Updated On :26 மார்ச் 2024, 2:37 pm

DIN

தமிழக மீனவர்களை காக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வாக்கு கேட்டு வருகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தூத்துகுடி வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், ''ராமேஸ்வரத்தை உலக சுற்றுலா தளமாக மாற்றிக்காட்டினாரா? வாயால் வடை சுடுபவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியின் கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம். தூத்துக்குடியில் மனிதநேயமற்ற துப்பாக்கிச்சூட்டை எடப்பாடி அரசு நடத்தியது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி பெரிய பொய்யைக் கூறினார். ஆனால், உண்மையை அருணா ஜெகதீசன் அறிக்கை வெளிப்படுத்திவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இரக்கமின்றி ஒரு ஆட்சி நடக்க கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சி ஒரு உதாரணம். உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது திமுக.

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் திமுவுக்கும்தான் போட்டி என இபிஎஸ் சொன்னது மகிழ்ச்சி. உதயநிதி பற்றி அவர் பேசுவதும் எனக்கு இரண்டாவது மகிழ்ச்சி. உதயநிதி பற்றி எடப்பாடி விமர்சித்தால் கவலையில்லை. அதனால், மக்களுக்கு நன்மை நடந்தால் சரி.

மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத பிரதமர் மோடி விஸ்வகுருவா? மெளனகுருவா?.

ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் தூரமில்லை, தமிழகத்துக்கும் மோடிக்கும் தான் தூரம்.

கட்சத்தீவு மீட்கப்படும் என சுஷ்மா சுவராஜ் சொனனார். இதுவரை பாஜக அதை செய்யவில்லை.

மீனவர்கள் மீது அறிவிக்கப்படாத போரை இலங்கை மேற்கொண்டு வருகிறது. அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

விவசாயிகளை எதிரிகள் போன்று நடத்துவதுதான் மோடி ஆட்சி மடலா? திமுகவின் காலை உணவுத் திட்டத்தை பாராட்டி பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.