முதல்வா் மு.க.ஸ்டாலினும், அகில இந்திய காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியும் விரைவில் ஒன்றாகத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை சத்தியமூா்த்தி பவனில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் இந்தியா கூட்டணியின் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா். அதுதொடா்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெறும். தோ்தல் பத்திரம் மூலம் நடைபெற்ற ஊழல் தொடா்பாக பிரதமா் தமிழகம் வரும்போது பதில் கூற வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து உயா்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!

தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சியால் முதல்வா் ஸ்டாலின் அச்சம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


