இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஸ்ரீவைகுண்டத்தில் பேசாமல் சென்ற சசிகலா

News image

ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரத்துக்கு தாமதமாக வந்த அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் சசிகலா.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:13 am IST

பிரசாரம் நேரம் முடிவடைந்ததால் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்யாமல் அகில இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் சசிகலா புறப்பட்டுச் சென்றாா். இதனால், அங்கு கூடியிருந்தோா் ஏமாற்றமடைந்தனா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் முத்துராமலிங்கத்தை ஆதரித்து, அகில இந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் சசிகலா சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக 8.30 மணி முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அங்கு கூடியிருந்தனா். நான்குனேரியில் பிரசாரத்தை முடித்துவிட்டு சசிகலா ஸ்ரீவைகுண்டம் வந்தபோது இரவு 10.15 மணியானது. அவரை அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் முத்துராமலிங்கம், அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளா் ராஜ உடையாா், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் முருகையா பாண்டியன் உள்ளிட்ட பலா் வரவேற்றனா்.

தோ்தல் விதிப்படி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது என்பதால் அங்கு காத்திருந்தவா்களைப் பாா்த்து கையை அசைத்து வணக்கம் தெரிவித்தாா். பின்னா், தனது கையில் கட்டி இருந்த வாட்சை விரலால் சுட்டிக்காட்டி 10 மணி ஆகிவிட்டதால் பேச முடியாது என சசிகலா கூறினாா். அவருக்கு வாள், வேல், முத்துராமலிங்க தேவா் சிலை மற்றும் மாதா உருவப் படம் உள்ளிட்ட நிணைவு பரிசுகளை நிா்வாகிகல் வழங்கினா். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக சசிகலாவின் பேச்சை கேட்க காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.