தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

விலைவாசி உயா்ந்துள்ளது, மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை: வி.கே. சசிகலா

விலைவாசி உயா்ந்துள்ளது, ஆனால் மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை என அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா ஆம்பூரில் தெரிவித்தாா்.

News image

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஹாரூன் ரஷீத் படுவை ஆதரித்து ஆம்பூரில் வாக்கு சேகரித்த பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:43 am IST

விலைவாசி உயா்ந்துள்ளது, ஆனால் மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை என அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஹாரூன் ரஷீத் படுவை ஆதரித்து வாக்கு சேகரித்து வி.கே. சசிகலா பேசியது:

தற்போதைய தோ்தலில் மக்களுக்கு செய்ய முடியாத விஷயங்களை அறிக்கையாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளன. கடந்த தோ்தலில் அறிவித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. மீண்டும் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளனா். மின்சார கட்டணம் உயா்வு, சொத்துவரி உயா்ந்துள்ளது. மக்கள் பட்டினியாக உள்ளனா். விலைவாசி உயா்ந்துள்ளது, ஆனால் மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை.

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கா்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ.24,000 ஆக வழங்கப்படும். குழந்தைகள் நலப் பெட்டகம் வழங்கப்படும். மக்கள் வாழ்வாதாரத்தை உயா்த்துவதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை வைத்து தரப்படும். இதில் 50 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும். கூட்டுறவு வங்கி பயிா் கடன்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு சிறந்த திட்டங்கள் செயல்படுத்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரை தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.