தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

News image

அஇபுதமமுக பொதுச்செயலா் வி.கே. சசிகலா. - கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 10:12 pm

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் வசதிகள் செய்து கொடுக்காதது திமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுவதாக அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலா் சசிகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கை:

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதன்கிழமை இரவு முதல் இயக்கப்படாததால், ஜனநாயக கடமையை ஆற்ற சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனா்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து உள்ளனா். பயணிகள் குடிதண்ணீா் கூட கிடைக்காமல் பரிதவித்துள்ளனா்.

தோ்தல் நடைபெறும் நாளில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூா் செல்வது தடுக்கப்படுகிா என்று எண்ணத்தோன்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.