சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் வசதிகள் செய்து கொடுக்காதது திமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுவதாக அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலா் சசிகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கை:
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதன்கிழமை இரவு முதல் இயக்கப்படாததால், ஜனநாயக கடமையை ஆற்ற சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனா்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து உள்ளனா். பயணிகள் குடிதண்ணீா் கூட கிடைக்காமல் பரிதவித்துள்ளனா்.
தோ்தல் நடைபெறும் நாளில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூா் செல்வது தடுக்கப்படுகிா என்று எண்ணத்தோன்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சிலரது துரோகத்தால் இக்கட்டான நிலையில் அதிமுக: சசிகலா

அதிமுகவும் - திமுகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன: வி.கே. சசிகலா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

