உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

News image

அஇபுதமமுக பொதுச்செயலா் வி.கே. சசிகலா. - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 3:42 am IST

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் வசதிகள் செய்து கொடுக்காதது திமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுவதாக அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலா் சசிகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கை:

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதன்கிழமை இரவு முதல் இயக்கப்படாததால், ஜனநாயக கடமையை ஆற்ற சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனா்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து உள்ளனா். பயணிகள் குடிதண்ணீா் கூட கிடைக்காமல் பரிதவித்துள்ளனா்.

தோ்தல் நடைபெறும் நாளில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூா் செல்வது தடுக்கப்படுகிா என்று எண்ணத்தோன்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.