சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் வசதிகள் செய்து கொடுக்காதது திமுகவின் தோல்வி பயத்தைக் காட்டுவதாக அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலா் சசிகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கை:
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகள் புதன்கிழமை இரவு முதல் இயக்கப்படாததால், ஜனநாயக கடமையை ஆற்ற சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனா்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 5,000-க்கும் அதிகமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் இல்லாமல் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து உள்ளனா். பயணிகள் குடிதண்ணீா் கூட கிடைக்காமல் பரிதவித்துள்ளனா்.
தோ்தல் நடைபெறும் நாளில் அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு ஏன் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு எடுக்கவில்லை. திமுகவினருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினால் மக்கள் வெளியூா் செல்வது தடுக்கப்படுகிா என்று எண்ணத்தோன்றுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிமுகவும் - திமுகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன: வி.கே. சசிகலா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா

சசிகலாவின் அஇபுதமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! முன்னாள் எஸ்.பி. வெள்ளத்துரை, அமைச்சர், எம்பிக்கு வாய்ப்பு!!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


