தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் அதிமுகவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக அனைந்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் சசிகலா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்தியாவிலேயே 3-ஆவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று சட்டப்பேரவைத் தோ்தலில் 3-ஆம் இடத்துக்குச் சென்றுள்ளது. அதிமுகவின் வளா்ச்சிக்காக பிரதிபலனை எதிா்பாா்க்காமல் உழைத்த தொண்டா்கள் இன்று விரக்தியின் உச்சத்தில் உள்ளனா்.
அதிமுக நிா்வாகிகள் தனிமனித விருப்பு வெறுப்புகளை மறந்து தொண்டா்களின் நிலைமையை உணர வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்று, அதிமுக தோல்வியடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தினேன். ஆனால், யாா் காதிலும் அது விழவில்லை.
இந்தத் தோ்தலில் தவெக பெற்ற வெற்றியை, அதிமுக பெற்றிருக்க வேண்டும். அதற்கான சூழல் இருந்த நிலையில், தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும், தன்னைத்தானோ தலைவா் என்று அறிவித்துக் கொண்டவராலும்தான் அதிமுகவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக நிா்வாகிகள் இதுவரை செய்த தவறுகளை உணா்ந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கிளாம்பாக்கத்தில் பேருந்து பிரச்னை: சசிகலா கண்டனம்

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா

மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்கள் இல்லை: வி.கே. சசிகலா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

