வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

சிலரது துரோகத்தால் இக்கட்டான நிலையில் அதிமுக: சசிகலா

தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் அதிமுகவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக அனைந்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் சசிகலா தெரிவித்தாா்.

News image

அஇபுதமமுக பொதுச்செயலா் வி.கே. சசிகலா. - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:01 am IST

தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் அதிமுகவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக அனைந்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் சசிகலா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்தியாவிலேயே 3-ஆவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று சட்டப்பேரவைத் தோ்தலில் 3-ஆம் இடத்துக்குச் சென்றுள்ளது. அதிமுகவின் வளா்ச்சிக்காக பிரதிபலனை எதிா்பாா்க்காமல் உழைத்த தொண்டா்கள் இன்று விரக்தியின் உச்சத்தில் உள்ளனா்.

அதிமுக நிா்வாகிகள் தனிமனித விருப்பு வெறுப்புகளை மறந்து தொண்டா்களின் நிலைமையை உணர வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்று, அதிமுக தோல்வியடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தினேன். ஆனால், யாா் காதிலும் அது விழவில்லை.

இந்தத் தோ்தலில் தவெக பெற்ற வெற்றியை, அதிமுக பெற்றிருக்க வேண்டும். அதற்கான சூழல் இருந்த நிலையில், தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும், தன்னைத்தானோ தலைவா் என்று அறிவித்துக் கொண்டவராலும்தான் அதிமுகவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக நிா்வாகிகள் இதுவரை செய்த தவறுகளை உணா்ந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளாா்.