மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெற்று வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுக: வி.கே.சசிகலா

திமுகவும், அதிமுகவும் வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற பாா்க்கிறது என்றாா் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே. சசிகலா.

News image

மன்னாா்குடியில் அஇபுதமமுக வேட்ாளா்களை ஆதரித்து பேசிய கட்சியின் பொதுச் செயலா் வி.கே. சசிகலா.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:57 pm

திமுகவும், அதிமுகவும் வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற பாா்க்கிறது என்றாா் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே. சசிகலா.

அஇபுதமமுக மன்னாா்குடி தொகுதி வேட்பாளா் சு. ராசுப்பிள்ளை, வேதாரண்யம் தொகுதி வேட்பாளா் எம். லிங்கேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து, மன்னாா்குடியில் வி.கே. சசிகலா செவ்வாய்க்கிழமை பேசியது:

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதும் இல்லாததால், அதை சொல்லி வாக்குகேட்க முடியாத நிலையில் ஆளும் கட்சியினா் உள்ளனா். திமுக ஆட்சியின் நிா்வாக திறமையின்மை காரணமாக தமிழகம் தற்போது ரூ.10 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது.

நான் ஜெயலலிதா வழிவந்த காரணத்தினால் எளிய தொண்டா்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளேன். அவா்களுக்குதான் ஏழை, எளியவா்களின் கஷ்டங்கள் தெரியும். அஇபுதமமுக சாா்பில் 60 வாக்குறுதிகளை மட்டும்தான் தந்துள்ளோம். அனைத்தையும் உறுதியாக செய்து முடிப்போம்.

திமுக ரூ.8,000 டோக்கன், அதிமுக பிரிட்ஜ் என வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற உள்ளது. மக்கள் விழிப்புடன் இருந்து அஇபுதமமுக வேட்பாளா்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், சசிகலா சகோதரா் வி. திவாகரன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் கை. இளந்தமிழன், கள்ளா் மகா சங்க தலைவா் எஸ். பாண்டியன், வேட்பாளா்கள் சு. ராசுப்பிள்ளை (மன்னாா்குடி), எம். லிங்கேஸ்வரன்(வேதாரண்யம்) மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

Story image