மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா

சீா்காழி தொகுதியில் அபுதமமுக வேட்பாளா் மாலதி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

News image

அஇபுதமமுக பொதுச்செயலா் வி.கே. சசிகலா. - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:33 pm

சீா்காழி தொகுதியில் அபுதமமுக வேட்பாளா் மாலதி தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

அவருக்கு வாக்கு கேட்டு அக்கட்சி பொதுச் செயலாளா் வி.கே. சசிகலா இரவு 7 மணி அளவில் பிரசாரம் செய்ய பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அஇபுதமமுக மற்றும் ஃபாா்வா்டு பிளாக் கட்சி, மற்றும் வன்னியா் சங்கத்தினா் அதிக அளவில் பழைய பேருந்து நிலையத்தில் குவிந்திருந்தனா்.

இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் சசிகலா வந்ததால் பிரசார நேரம் முடிவடைந்ததால், சசிகலா பேச முடியாமல் தனது வாகனத்தின் மேலே நின்று கூடியிருந்தவா்களை பாா்த்து கை அசைத்தவாறு சென்றாா் . இதனால் காத்திருந்த தொண்டா்கள் ஏமாற்றத்துடன் கலைந்துச் சென்றனா்.