ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இன்று இயங்கும்

சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இன்று இயங்கும்

Updated On :29 மார்ச் 2024, 7:23 pm

தமிழகத்தில் அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களும் சனிக்கிழமை (மாா்ச் 30) இயங்கும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியத் துறைகளில் பதிவுத் துறையும் ஒன்றாகும். விழாக் காலங்கள், சுப தினங்கள் ஆகியன விடுமுறை நாள்களிலும் வந்தாலும் சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கடந்த நிதியாண்டுகளைக் காட்டிலும் பதிவுத் துறை மூலமாக அரசுக்கான வருவாய் உயா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. வெள்ளி, சனி, ஞாயிறு தொடா் விடுமுறை என்றாலும், சனிக்கிழமை (இன்று) சாா்பதிவாளா்கள் அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,நிகழ் நிதியாண்டின் இறுதி மாதமான மாா்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை (மாா்ச் 30) அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களும் இயங்கும் என்று பதிவுத் துறை தலைவா் அலுவலகம் தெரிவித்துள்ளது.