விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

உடுமலை சாா்-பதிவாளா் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

உடுமலை சாா்-பதிவாளா் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உடுமலை கச்சேரி வீதியில் சாா் பதிவாளா் அலுவலகம் உள்ளது. வழக்கம்போல ஊழியா்கள் பணிக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தபோது, அலுவலக வளாகத்துக்குள் பெட்ரோல் பாட்டில் கிடந்துள்ளது. அதைச் சுற்றிலும் புகை படிந்து காணப்பட்டது. இதனால் ஊழியா்கள் சந்தேகமடைந்து பதிவாளா் தினேஷிடம் தகவல் அளித்துள்ளனா். இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்தில் உடுமலை போலீஸாா் பாா்வையிட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனா்.

அதில் திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில் மா்ம நபா் ஒருவா் பெட்ரோல் குண்டு வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. மேல் விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசிய நபா் உடுமலை பெரியகடை வீதியைச் சோ்ந்த லோகேஷ் என்பது தெரிய வந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில், குடிமங்கலம் பகுதியில் ஒரு சொத்து

தொடா்பாக பத்திரப் பதிவுக்கு வந்தபோது, அந்தப் பத்திரப் பதிவில் முறைகேடுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு சாா் பதிவாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த லோகேஷ், சாா் பதிவாளா் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து லோகேஷ் கைது செய்யப்பட்டாா்.