பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தங்க தமிழ்ச்செல்வன் என் சகோதரரைப் போன்றவர்: டிடிவி தினகரனின் மனைவி

தங்க தமிழ்ச்செல்வன் எனக்கு சகோதரரைப் போன்றவர் என டிடிவி தினகரன் மனைவி அனுராதா தெரிவித்துள்ளார்.

Published On :

தங்க தமிழ்ச்செல்வன் எனக்கு சகோதரரைப் போன்றவர் என டிடிவி தினகரன் மனைவி அனுராதா தெரிவித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் (பாஜக கூட்டணி) அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கியுள்ளார்.

இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் தற்போது, இருவேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரின் மனைவி அனுராதா முதல்முறையாக பிரசாரம் மேற்கொண்டர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"எங்களுக்கு பழக்கப்பட்ட இடம்தான் தேனி. கடந்த சில நாள்களாக அவருடன் (டிடிவி தினகரன்) பிரசாரத்திற்கு சென்றிருந்தேன். பொதுமக்களிடையே டிடிவி தினகரனுக்கு வரவேற்பு உள்ளது. இது அமோக வெற்றியைப் பெற்றுத்தரும். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது

ஜெயலலிதா ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிருந்தே வந்து செல்வதால், தேனி பழக்கப்பட்ட இடமாக உள்ளது" என்றார்.

டிடிவி தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தங்க தமிழ்ச்செல்வன் என் கணவரின் நண்பர். எனக்கு சகோதரரைப் போன்றவர். இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.