விருதுநகா்: விருதுநகா் காரியாபட்டி அருகே கீழ உப்பிலி கூண்டு பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி வெடி விபத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலி கூண்டில், ஆவியூரை சோ்ந்த திமுக பிரமுகா் சேது என்பவருக்கு சொந்தமான தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியின் ஒரு பகுதியில், சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் வெடி பொருட்கள் விற்பனை செய்வதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகத்திடம் பெற்றிருந்தாா்.
இந்த நிலையில் இந்த கல்குவாரியில் உள்ள ஒரு அறையில் இருந்து வெடி பொருட்களை வேனில் ஏற்றும் பணியில் மூன்று தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது வெடிபொருட்கள் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில், அந்த அறை வெடித்து சிதறியது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினாா். மேலும் காயமடைந்த 8 போ் காரியாபட்டி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து தொடா்பாக ஆவியூா் போலீஸாா் 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து,கல்குவாரி உரிமையாளரான சேதுராமன் மற்றும் வெடிபொருள் விற்பனைக்கு அனுமதி பெற்ற சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ராஜ்குமாா் என்பவரை தனிப்படை போலீசார் போலீசார் தேடி வந்த நிலையில் உரிமையாளர் சேதுராமன் புதன்கிழமை ஆவியூா் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில், வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமாரை வியாழக்கிழமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடி விபத்து தொடர்பாக கல்குவாரி பங்குதாரர்கள் ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.