திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை காவல்துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மர்ம மரணமடைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய 2ஆவது கடிதத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கடிதத்தின் பேரிலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான விசாரணைக்கு கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மூத்த மகன் கருப்பையா ஜெப்ரின், இளைய மகன் மார்ட்டினிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.