2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

அடுத்த 2 வாரங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

அடுத்த 5 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

கோப்புப்படம்
தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

"இன்னும் 5 நாள்களில் வளிமண்டல சுழற்சி உருவாகி தமிழகத்தில் அதிக இடங்களில் மழை பெய்யும். எனவே, அடுத்த 2 வாரங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை இல்லை.

கடந்த 2014 மே மாதம் இதேபோல வளிமண்டல சுழற்சி உருவாகி தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெரும் மழை பெய்தது எனக்கு நினைவிருக்கிறது. இனிய நாள்களுக்காக காத்திருப்போம்." என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com