புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜெயக்குமாரின் செல்போன் எங்கே? புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானது!

ஜெயக்குமார் வைத்திருந்த செல்போனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

News image

கே.பி. ஜெயக்குமார்

Updated On :9 மே 2024, 6:28 am

DIN

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அவர், காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட மே 2-ஆம் தேதி, திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் டார்ச் லைட் வாங்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து கடைக்காரரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், டார்ச் லைட் வாங்க வந்தபோது ஜெயக்குமாரின் முகத்தில் எவ்வித பதற்றமும் இல்லையென்றும், சிரித்த முகத்துடனே காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் அவரது குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்த பிறகு எரித்தால்தான் குரல்வளை முற்றிலும் எரியும் என்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட அவரின் தோட்டத்தில் இருந்தும் சில பொருள்களை கைப்பற்றி எந்தவகையான எரிபொருள் எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஜெயக்குமாரின் காணாமல் போன செல்போன் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவலர்கள், அதனை தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

அவரது குடும்பத்தினருக்கு எந்தெந்த டவர்களில் இருந்து போன்கள் வந்துள்ளது என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.

ஜெயக்குமாரின் முழு உடற்கூறாய்வின் அறிக்கை கிடைத்தால் மேலும் பல முடிச்சுகள் அவிழும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா். அவரது சடலத்தை காவல்துறையினா் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினா். பின்னா் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.