தமிழகத்தில் கடந்த மார்ச் முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
வெப்ப அலைக்கு இடையே அங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை காலை திடீரென மழை பெய்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:
மேகக் கூட்டங்கள் எல்லாம் கடல்புறத்தை நோக்கி செல்கின்றன. பெருங்குளத்தூரில் நல்ல மழை பெய்துள்ளது.
நன்னிலம், கொள்ளிடம், திருவாரூர், கல்பாக்கம், ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.