சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 7 அறைகள் தரைமட்டமாகின. 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
முதலில், செங்கமலப்பட்டி விபத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்ததால், அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக இருந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.