விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பயங்கர வெடி விபத்து நேரிட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 7 அறைகள் தரைமட்டமாகின. இதுவரை 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கமலப்பட்டி விபத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருப்பதால், அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.