பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!
அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்தரி வெய்யில் எனும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி முதல் நிலவி வருகிறது. இதனிடையே வெயில் ஓரிரு இடங்களில் கொளுத்தி வந்தாலும், வருண பகவானின் கருணையினால் ஆங்காங்கே சற்று மழையும் பெய்து வருகின்றது.
இன்று காலை சென்னையில் பரவலாக சாரல் மழை முதல் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது. மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...