வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

News image
கோப்புப் படம்.
Updated On :19 மே 2024, 6:41 am

DIN

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் குளிக்க பக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கிருக்கும் கடலில் புனித நீராடுவது வழக்கம்.

ஆனால் அப்பகுதியில் உள்ள கடலில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் உலா வருகின்றன.

இம்மீன்களை தொட்டால், அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட உடல் பிரச்னை ஏற்படும். எனவே பக்தர்களின் நலன் கருதி திருச்செந்தூர் கோயில் கடலில் குளிக்க பக்கர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கடலில் குளிக்காமல், பாதங்களை மட்டும நனைத்துவிட்டு செல்லலாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.