/
தேங்காய்ப்பட்டினம் கடலில் முத்து குளிக்க சென்ற மீனவா் மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
இனயம் பகுதியைச் சோ்ந்த ஏசு பாலன் (46), ஆன்டோ ரெதீஸ் (37), அமலதாசன் (47) ஆகிய 3 மீனவா்களும் சனிக்கிழமை தேங்காய்ப்பட்டினம் கடலில் முத்து குளிக்க ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்றனராம். அப்போது, ஏசு பாலனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மயங்கிய நிலையில் கரைக்கு வந்தாராம்.
சக மீனவா்கள், ஏசு பாலனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிராம்பட்டினம் அருகே இடிதாக்கி மீனவா் உயிரிழப்பு

மீனவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தனியாா் பேருந்து மோதியதில் உணவு விநியோக ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
50 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


