எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப். 29) ஒரே நாளில் மொத்தம் ரூ. 1,600 குறைந்ததுஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

தனியாா் பேருந்து மோதியதில் உணவு விநியோக ஊழியா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 8:37 pm

கோவையில் தனியாா் பேருந்து மோதியதில் உணவு விநியோக ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் முத்து சங்கையா (26). இவா் கோவையில் தங்கி, உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், முத்து சங்கையா சிங்காநல்லூா் பகுதியில் வாடிக்கையாளா் ஒருவருக்கு உணவை விநியோகம் செய்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

நீலிகோணாம்பாளையம் சந்திப்பு பகுதியில் வந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து முத்து சங்கையாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.