தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி உடைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :21 மே 2024, 9:36 am IST

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி உடைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தென்காசியில் இருந்து மதுரைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. வாசுதேவநல்லூர் அருகே உள்ள திருமலாபுரம் விலக்கில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் முகத்தில் துணியைக் கட்டி மறைத்தவாறு வந்த சிலர் அரசுப் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

இதையடுத்து, அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மாரிமுத்து( 49), நடத்துநர் பெரியசாமி(49) ஆகியோர் அளித்த தகவலின் பேரில் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் கண்மணி, சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி உள்ளிட்ட ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, பேருந்துகளை போலீஸார் அப்பகுதியில் இருந்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.