சிக்கல் சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்பும் அதிசயம்: திரளானோர் தரிசனம்

சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று(நவ. 6) இரவு நடைபெற்றது.
தாய் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கியபோது சிங்காரவேலவா் முகத்தில் அரும்பிய வியா்வை துளிகள்.
தாய் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கியபோது சிங்காரவேலவா் முகத்தில் அரும்பிய வியா்வை துளிகள்.கோப்புப்படம்
Updated on
1 min read

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

இத்தலத்தில், அம்பாள் வேல் நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறாா். இறைவன் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்ய இத்தலத்தில், அன்னை வேல் நெடுங்கண்ணியிடமிருந்து சக்தி வேல் பெற்றாா் என்பது ஐதீகம். அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்வின்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்புவது வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று(நவ. 6) இரவு நடைபெற்றது. வேல் வாங்கும்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்பும் அதிசய காட்சியைக் காண கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இதையொட்டி கோயிலில் காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com