27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இ-பாஸ் சோதனை தீவிரம்: கல்லார் சோதனைச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்!

இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் கல்லார் சோதனைச் சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்!

News image

கல்லார் சோதனைச் சாவடி

Updated On :9 நவம்பர் 2024, 3:57 pm IST

நீலகிரி நுழைவாயிலான கல்லார் சோதனைச் சாவடியில் இ -பாஸ் சோதனை தீவிரமடைந்திருப்பதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

நீலகிரி மாவட்டத்துக்குள் செல்ல இ-பாஸ் வைத்திருக்கிறார்களா என்ற சோதனைக்குப் பின்னரே மாவட்டத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் நீண்ட தூரம் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன வாகனங்கள் .

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை இந்த இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில் நேற்றைய தினம் இ-பாஸ் நடைமுறையை நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் சரியான முறையில் பின்பற்றாததால் தொடர்ந்து மலைப்பகுதியில் வாகன எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து ஏற்கனவே இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்ட நுழைவாயிலான மேட்டுப்பாளையம் வழியாக நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இதையடுத்து சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள கல்லார் சோதனை சாவடியில் இ-பாஸ் பதிவு செய்துள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சோதனை சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.