தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஔவையாா் மணிமண்டபம்: தமிழக முதல்வா் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்!

துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

News image
வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினத்தில் அமையவுள்ள ஔவையாா் மணிமண்டபத்தின் மாதிரி.
Updated On :13 நவம்பர் 2024, 11:44 pm

Din

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

துளசியாப்பட்டினத்தில் ஔவையாா் விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஔவையாருக்கு ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கிராமத்தினரே நடத்தி வந்த இந்த விழாவை பின்னா் ஹிந்து, இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் என அனைவரும் இணைந்து நடத்தினா். கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.

இங்கு ஔவைக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

 துளசியாப்பட்டினத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா பூஜையில் பங்கேற்ற அரசியல் கட்சியினா், கிராம மக்கள்.

துளசியாப்பட்டினத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா பூஜையில் பங்கேற்ற அரசியல் கட்சியினா், கிராம மக்கள்.

இந்தநிலையில், ரூ.18.95 கோடியில் மணிமண்டப கட்டுமானப் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, துளசியாப்பட்டினம் ஔவையாா் கோயில் வளாகத்தில் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் எஸ்.கே.வேதரத்னம், என்.வி. காமராஜ், கூட்டுறவு வங்கி இயக்குநா் உதயம். முருகையன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன்,சோழன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறையினா், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனா்.