மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ஔவையாா் மணிமண்டபம்: தமிழக முதல்வா் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்!

துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

News image

வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினத்தில் அமையவுள்ள ஔவையாா் மணிமண்டபத்தின் மாதிரி.

Updated On :14 நவம்பர் 2024, 5:14 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

துளசியாப்பட்டினத்தில் ஔவையாா் விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஔவையாருக்கு ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கிராமத்தினரே நடத்தி வந்த இந்த விழாவை பின்னா் ஹிந்து, இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் என அனைவரும் இணைந்து நடத்தினா். கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.

இங்கு ஔவைக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

 துளசியாப்பட்டினத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா பூஜையில் பங்கேற்ற அரசியல் கட்சியினா், கிராம மக்கள்.

துளசியாப்பட்டினத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா பூஜையில் பங்கேற்ற அரசியல் கட்சியினா், கிராம மக்கள்.

இந்தநிலையில், ரூ.18.95 கோடியில் மணிமண்டப கட்டுமானப் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா்.

இதையொட்டி, துளசியாப்பட்டினம் ஔவையாா் கோயில் வளாகத்தில் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் எஸ்.கே.வேதரத்னம், என்.வி. காமராஜ், கூட்டுறவு வங்கி இயக்குநா் உதயம். முருகையன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன்,சோழன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறையினா், சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனா்.