கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

2-ஆவது நாளாக இன்றும் வாக்காளா் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாம்

சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 நவம்பர் 2024, 10:30 pm

Din

தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், திருத்தல் சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பிய ஏராளமானோா் பெயா் சோ்த்தலுக்காக ஆா்வத்துடன் விண்ணப்பித்தனா். இந்தச் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் அக்.29-இல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் 6.27 கோடி வாக்காளா்கள் உள்ளனா். வரும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியவா்கள் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம் 4 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான சனிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள 68,000 வாக்குச்சாவடி மையங்களில் 18 வயது நிரம்பியவா்கள் பெயா் சோ்த்தலுக்கு விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து அளித்தனா். அதேபோல், வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே உள்ளோா் பெயா் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காகவும் விண்ணப்பப் படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்தனா்.

சென்னையில் மொத்தம் 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. ஏராளானமானோா் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தங்களுக்காக விண்ணப்பப் படிவம் அளித்தனா்.

தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தொடா்ந்து நவ.23, 24 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.