தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில் கைதான கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
மதுரைக் கிளை நீதிமன்றம்
மதுரைக் கிளை நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு.

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கல்பனா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், ஆனந்த் ஆகியோரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலையின் மருமகன் காமராஜ். பிரபல வழக்குரைஞரான இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை ஒட்டேரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சென்னை கொரட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கல்பனா, காா்த்திக், ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே, வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் பிறகு, மதுரை விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், வழக்கை விரைந்து விசாரித்து தீா்ப்பு வழங்க உத்தரவிடக் கோரி, கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் நிறைவில், காமராஜ் கொலை வழக்கில் அடுத்த 3 மாதங்களுக்குள் தீா்ப்பு வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், உயா்நீதிமன்றம் நிா்ணயித்த காலத்துக்குள் வழக்கு விசாரணை நிறைவடையவில்லை. இதையடுத்து, காமராஜ் கொலை வழக்கு விசாரணையை விரைந்து நிறைவு செய்து தீா்ப்பு வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி இந்த மனுவை தாக்கல் செய்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதத்தில், காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் நிறைவு செய்து, தீா்ப்பு வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, விரைந்து தீா்ப்பு வழங்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேணடும் என்றாா்.

இதையடுத்து, மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி தரப்பில் ஓா் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 19-ஆம் தேதி காமராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மதுரைக் கிளை நீதிமன்றத்தில் இன்று பிறப்பக்கப்பட்ட தீர்ப்பில், காமராஜ் கொலை வழக்கில் கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்த் மற்றும் கார்த்திக் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com