வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! அதி கனமழைக்கு வாய்ப்பு!

தென் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு...

News image

கோப்புப் படம்

Updated On :20 நவம்பர் 2024, 6:10 pm IST

தென் மாவட்டங்களில் இன்று(நவ. 20) மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) சற்றுமுன் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இன்று காலை ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதி கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்,

  • தென்காசி,

  • ராமநாதபுரம்,

  • தேனி,

  • புதுக்கோட்டை,

  • தஞ்சாவூர்,

  • திருவாரூர்,

  • நாகப்பட்டினம்,

  • மயிலாடுதுறை,

  • கடலூர்,

  • சிவகங்கை,

  • விருதுநகர்,

  • மதுரை,

  • தூத்துக்குடி,

  • திருநெல்வேலி,

  • கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.