சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப் பலகையில் அரிஜன் காலனி எனும் பெயரை மாற்றக் களம்கண்டு போராடியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரிஜன் காலனி’ என்பதை, ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயா் மாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பெயரை மாற்றுவதற்கான அரசாணையை வெளியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மல்லசமுத்திரம் கிராமத்துக்கு திங்கள்கிழமை சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினாா். மேலும், இதற்காகக் களம்கண்ட பெரியவா் கணேசன்
உள்ளிட்டோருக்கு அமைச்சா் பாராட்டு தெரிவித்தாா்.
இந்த நிகழ்வு குறித்து, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
சமத்துவ சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவா் கணேசன், வழக்குரைஞா் அன்பழகன் போன்றோா் போற்றுதலுக்கு உரியவா்கள் எனப் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

சேந்தமங்கலம் தொகுதி தவெக வேட்பாளா்

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா்

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா்!

திருக்கனூா் அரசுப் பள்ளிக்கு முன்னாள் முதல்வா் பெயா்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


