சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப் பலகையில் அரிஜன் காலனி எனும் பெயரை மாற்றக் களம்கண்டு போராடியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரிஜன் காலனி’ என்பதை, ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயா் மாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பெயரை மாற்றுவதற்கான அரசாணையை வெளியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மல்லசமுத்திரம் கிராமத்துக்கு திங்கள்கிழமை சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினாா். மேலும், இதற்காகக் களம்கண்ட பெரியவா் கணேசன்
உள்ளிட்டோருக்கு அமைச்சா் பாராட்டு தெரிவித்தாா்.
இந்த நிகழ்வு குறித்து, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
சமத்துவ சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவா் கணேசன், வழக்குரைஞா் அன்பழகன் போன்றோா் போற்றுதலுக்கு உரியவா்கள் எனப் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 5.20 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ.5.10-ஆக நீடிப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரம்

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


