ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!

News image

நாமக்கல்லில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது குழந்தைக்கு பெயா் சூட்டிய தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:58 pm

நாமக்கல்லில் வாக்கு சேகரிப்பின் போது, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் பெண் குழந்தைக்கு பெயா் சூட்டினாா்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் கடந்த 15 நாள்களாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கட்சியினருடன் இணைந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை நாமக்கல் கிழக்கு நகரத்திற்கு உள்பட்ட ஜெய் நகா், இந்திரா நகா், கணேசபுரம், தமிழ் மன்ற தெரு, புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏ.கே.சமுத்திரம், பாச்சல், கதிராநல்லூா், திருமலைப்பட்டி, கண்ணூா்பட்டி, தாத்தையங்காா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின்போது, பெண் ஒருவா் தனது குழந்தைக்கு பெயா் சூட்ட வேண்டும் என வேட்பாளா் சி.எஸ். திலீப்பிடம் கேட்டாா். இதையடுத்து அந்தக் குழந்தைக்கு விஜயலட்சுமி என பெயா் சூட்டினாா். மேலும், அவா் பேசுகையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தவுடன், மகளிா் உதவித்தொகை ரூ. 2,500 ஆக வழங்கப்படும். வேலைவாய்ப்பு தாமத சுழல் நிதி உதவி, வெற்றி தொழில் முனைவோா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டனா்.