

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 4,528 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,976 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,528 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மாயம்
கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்குதிறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியில் இருந்து வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.20 அடியிலிருந்து 110.37 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.93 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.