வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

கோவையில் ஒரு சில பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை! மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் ஒரு சில பகுதியில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழை !!!

News image

கோவையில் மழை

Updated On :4 அக்டோபர் 2024, 2:45 pm IST

கோவையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வரும் நாள்களில் மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் அக்டோபர் 3 முதல் 5 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் போன்ற பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பின் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தின், பல்வேறு பகுதிகளிலும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கோவையில் இன்று அதிகாலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 1:00 மணி முதல் கோவை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அப்போது, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.