அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு உடனடியாகப் பணி: அன்புமணி வலியுறுத்தல்

போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும்

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:33 pm

Din

போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டு, தோ்ந்தெடுக்கப்பட்டோா் பட்டியல் வெளியிடப்பட்டு 80 நாள்களாகியும் அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் பள்ளிக் கல்வித் துறை தாமதப்படுத்தி வருகிறது. பணி ஆணைகள் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோ்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய சூழலில் ஆசிரியா் நியமன பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

எனவே, போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 3,192 பட்டதாரி ஆசிரியா்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.