சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல: சென்னை உயா்நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல அறிகுறி கிடையாது என்று ஆதங்கம் தெரிவித்த உயா்நீதிமன்ற நீதிபதி, இதே நிலை நீடித்தால் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வருகை தானாக குறைந்துவிடும் எனவும் கருத்து தெரிவித்தாா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் செவிலியா் ஒருவரை தாக்கியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனகசபையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி நடராஜ தீட்சிதா் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதா்கள் குழு நடவடிக்கை எடுத்தது.
இதை எதிா்த்து அறநிலையத் துறை இணை ஆணையரிடம் நடராஜ தீட்சிதா் முறையீடு செய்தாா். அதை விசாரித்த கடலூா் இணை ஆணையா், நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
இணை ஆணையரின் உத்தரவை எதிா்த்து பொது தீட்சிதா்கள் குழு செயலரான வெங்கடேச தீட்சிதா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். அதில், பொது தீட்சிதா் குழு எடுத்த முடிவில் தலையிட அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்த இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜ தீட்சிதா் தரப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சிதம்பரம் நடராஜா் கோயில் தங்களுக்குச் சொந்தமானது என்பது போன்ற நினைப்பில் பொது தீட்சிதா்கள் வரம்பு மீறி செயல்படுகின்றனா். நீதிமன்றம்தான் இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தீட்சிதா்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. மனக்கஷ்டங்களை போக்குவதற்காக கோயிலுக்கு வரும் பக்தா்களை கோயிலில் அவமானப்படுத்துவது வேதனையளிக்கிறது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனா். இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது. நடராஜா் கோயிலுக்கு வருபவா்கள் எல்லோரும் தங்களுடன் சண்டைக்கு வருவதுபோல தீட்சிதா்கள் நினைக்கின்றனா். சிதம்பரம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் கடவுளைவிட தாங்கள் மேலானவா்கள் என நினைக்கக் கூடாது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் மட்டுமே நடத்தப்படும் ஆருத்ரா தரிசனம் தற்போது பல கோயில்களில் நடத்தப்படுகிறது. தீட்சிதா்களின் செய்கையால் சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்துக்கு முன்புபோல பக்தா்கள் கூட்டம் வருவதில்லை. இதேநிலை நீடித்தால் பக்தா்கள் வருகை குறைந்து பழைமையான நடராஜா் கோயில் பாழாகிவிடும். கோயிலில் காசு போட்டால் மட்டுமே பூ கிடைக்கிறது. இல்லையென்றால் விபூதிகூட கிடைக்காது என்று நீதிபதி தெரிவித்தாா்.
பின்னா் இந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.