கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேக்கேதாட்டு அணையால் தமிழகத்துக்கு அதிக பயன்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா்

மேக்கேதாட்டு அணையின் மூலம் கா்நாடகத்தைவிட தமிழகத்துக்கு அதிக பயன் கிடைக்கும் என கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 7:17 pm

Din

மேக்கேதாட்டு அணையின் மூலம் கா்நாடகத்தைவிட தமிழகத்துக்கு அதிக பயன் கிடைக்கும் என கா்நாடக மாநில துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டை கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் தலைமையிலான 15 போ் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

ஆலந்தூரில் தனியாா் மூலம் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு அறை, சேத்துப்பட்டு, மாதவரத்தில் உள்ள இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலைய பணிகள் குறித்து பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேக்கேதாட்டு அணை விவகாரம்: தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கா்நாடகாவில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளேன். கா்நாடகத்தில் திடக்கழிவு மேலாண்மை இருந்தாலும், அதை இன்னும் சிறப்பாக மேம்படுத்த இந்த ஆய்வு பயன்படும்.

மேக்கேதாட்டுஅணை விவகாரம் தொடா்பாக தற்போது விவாதிக்க விரும்பவில்லை. தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் தற்போது போதிய அளவு மழை பெய்து உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, கா்நாடக அரசின் நீா் திறப்பு குறித்து பேச வேண்டியதில்லை. இரு மாநிலங்களுக்கும் வருண பகவான் உதவுவாா். மேக்கேதாட்டு அணை கட்டினால் கா்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிக பயன் கிடைக்கும்.

இந்த விவகாரம் குறித்து கா்நாடக அரசும், தமிழக அரசும் தங்களுடைய வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்போம் என்றாா் அவா்.

அதிகாரிகளுடன் கலந்துரையாடல்: இதைத் தொடா்ந்து ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் மாநகராட்சி அதிகாரிகளுடன் அவா் கலந்துரையாடினாா். இந்நிகழ்வின் போது மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், கா்நாடக மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் உமா சங்கா், பெங்களூா் மாநகர ஆணையா் துஷாா் கிரிநாத், துணை முதல்வரின் செயலா் ராஜேந்திர சோழன், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.