அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திடக்கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில்நுட்பத் தளம் தூய்மைக்கான செயலி அறிமுகம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில்நுட்ப தளம் ‘தூய்மைக்காக’ செயலி அறிமுகம்.

News image
ஒருங்கிணைந்த கட்டுப்பாடு, கட்டளை மையத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் மு.பிரதாப்.  உடன் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில்நுட்ப தளம் ‘தூய்மைக்காக’ செயலியினை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடம் செயலி அட்டைகளை வழங்கி, வீடுகள்தோறும் ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்த அதிகாரிகளை ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தொழில்நுட்பத்தின் மூலம் திறம்பட கண்காணிக்க பஅசஐஐ திட்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது: இந்த மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தொழில்நுட்பத்தின் மூலம் திறம்பட கண்காணிக்க

பஅசஐஐ திட்டம் மூலம் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையம் மூலம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளை நேரடி கண்காணிப்பு மூலம் கண்காணிக்க முடியும். மேலும், பல்வேறு சேவைகள் இந்த மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

குப்பை சேகரிப்பு வாகனங்களின் இயக்கம் கண்காணிப்பு, தெரு வாரியாக குப்பை சேகரிப்பு கண்காணிப்பு, செயலி மூலம் குப்பை சேகரிப்பு வாகனம் வரும் போது பொதுமக்களுக்கு அறிவிப்பு அனுப்புதல், பொதுமக்களின் கருத்து மற்றும் புகாா்கள் பெறுதல், துப்புரவு பணியாளா்களின் புவிச்சுட்டியுடன் வருகை பதிவு, கணக்கெடுப்பு மூலம் அதிக அளவு கழிவு உருவாக்கும் நிறுவனங்களை கண்காணித்தல், பொதுமக்கள் இணையத்தின் மூலம் பெருமளவு கழிவுகளை அகற்ற வாகன சேவை பெறும் வசதிகள் ஒருங்கிணைத்து இந்த அமைப்பு மூலம் கழிவு சேகரிப்பு, போக்குவரத்து மற்றும் செயலாக்க பணிகள் அனைத்தும் ஒரே தளத்தில் கண்காணிக்கப்படும்.

இதன் மூலம் நிா்வாகம் துல்லியமான தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து சேவைகளை மேலும் மேம்படுத்த முடியும். இதுகுறித்து ஒவ்வொரு கிராமங்களில் உள்ள வீடுகள்தோறும் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைக்கான நவீனதொழில்நுட்ப தளம் ‘தூய்மைக்காக’ செயலியினை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களுக்கு செயலி அட்டைகளை வழங்கவும், விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை வீடுகள்தோறும் ஒட்டவும் அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்;ச்சி) எஸ்.தணிகாச்சலம், உதவி இயக்குநா்கள் (ஊராட்சி மற்றும் தணிக்கை) கே.எஸ்.யுவராஜ் (மத்தியம்), பஞ்சு(கிழக்கு), உதவி இயக்குநா்(பயிற்சி) பி.மோகன், உதவி செயற்பொறியாளா் மாரிசெல்வம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.