நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மகாவிஷ்ணு விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

மகாவிஷ்ணு விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

News image

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :7 செப்டம்பர் 2024, 5:56 pm IST

மகாவிஷ்ணு விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு பிரச்னை வருகிறது என்றால், உடனடியாக அந்த பிரச்னையை சந்திக்க வேண்டும். அந்த பிரச்னைக்கு என்ன தீர்வு, நடவடிக்கை என்ன என எடுக்க வேண்டும்.

எடுத்துவிட்டால் நான் அடுத்த பணிக்குச் சென்றுவிடுவேன். எனவே காவல்துறை வசம் வழக்கு போய் உள்ளது. காவல் துறை அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். மாற்றுத்திறனாளி சங்கத்தினர் அவமானப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர். இனிமேல் காவல்துறையும் - மாற்றுத்திறானாளி சங்கத்தினரும் பார்த்துக் கொள்வார்கள்.

அவர் செய்தது தப்பா இல்லையா என்று சட்டம் தன் கடமையை செய்யும். நாங்கள் இனி பள்ளிக்கூடத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஒரு குழு அமைத்து யார் யார் பேச வேண்டும்? என்ன மாதிரி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று நெறிமுறைகள் வரையறுக்க இருக்கிறோம். மிக விரைவில் அதற்கான கமிட்டி அமைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.