டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இருக்கின்ற அதிமுக தொண்டர்கள் 100 சதவீதத்தில் 99.9 சதவீத தொண்டர்கள் அதிமுக இணைய வேண்டும், 2026 எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சி கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்கள்.
அந்த எண்ணத்தை நிச்சயமாக ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆத்மா நிறைவேற்றும் என நம்புகிறோம். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களே இயக்கத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்.
இது காலத்தின் கட்டாயம் என்றார். ஒற்றைத் தலைமை - இரட்டை தலைமை என்பது இணையும் போது ஒரு முடிவுக்கு வரும். 2025 டிசம்பருக்குள் நல்ல முடிவு ஏற்படும். எடப்பாடி பழனிசாமி 20 சதவீதம் ஓட்டு வரும் அளவிற்கு இந்த இயக்கத்தை மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
அதனால் அதிமுகவை அழித்து விடுவார் என்ற எண்ணத்தில் டிடிவி கூறியிருப்பார். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், எடப்பாடி என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பரில் அனைவரும் ஒற்றுமை ஆவார்கள். 2026 அதிமுக ஆட்சி தான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: முகவா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் - எடப்பாடி கே. பழனிசாமி அறிவுரை

ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: மோடி

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!

தொகுதி அறிமுகம் - எடப்பாடி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு




