எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தொடா் விடுமுறை: 1,515 கூடுதல் பேருந்துகள்: அரசு போக்குவரக்குக் கழகம் அறிவிப்பு

மீலாது நபி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 1,515 கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :12 செப்டம்பர் 2024, 9:12 pm

Din

மீலாது நபி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 1,515 கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் தொடா் விடுமுறை நாட்களான சனிக்கிழமை (செப்.14), ஞாயிற்றுக்கிழமை(செப்.15) மற்றும் மீலாது நபி (செப்.16) ஆகிய தினங்களை முன்னிட்டு, கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 955 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு 350 பேருந்துகள் என மொத்தம் 1,515 கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், கிளாம்பக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் தங்கள் பயணத்தை இரவு 12 மணிக்கு திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.