ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சென்னை: 22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்! -தமிழ்நாடு வெதர்மேன்

மதுரை, சென்னையில் பல ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.

News image
Updated On :17 செப்டம்பர் 2024, 11:33 pm IST

சென்னையிலும் மதுரையிலும் பல ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாள்களாக வெய்யில் வாட்டி வதைக்கிறது.

இந்த நிலையில், சென்னையில்செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2002, செப்டம்பரில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. அதன்பின், சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய்க்கிழமை(செப். 17) 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மதுரையில் நிகழாண்டு செப்டம்பரில்(செப். 17) இதுவரை இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.