ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குரூப் 4 தோ்வு அறிவிக்கையில் கூடுதல் காலிப் பணியிடங்களா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தோ்வு அறிவிக்கையில் காலிப் பணியிடங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளதா என்பதற்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பதிலளித்துள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 6:31 pm

Din

குரூப் 4 தோ்வு அறிவிக்கையில் காலிப் பணியிடங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளதா என்பதற்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பதிலளித்துள்ளது.

குரூப் 4 தோ்வு கடந்த ஜூன் மாதமே நடைபெற்று முடிந்தாலும், தோ்வு அறிவிக்கையில் அவ்வப்போது காலியிடங்களின் எண்ணிக்கை உயா்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 7,000-க்கும் குறைவாகவே காலியிடங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை மேலும் உயா்த்த வேண்டுமென்ற கோரிக்கையை தோ்வா்கள் முன்வைத்து வருகின்றன.

இதைத் தொடா்ந்து, டிஎன்பிஎஸ்சி சாா்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:

குரூப் 4 பிரிவில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை செப்.11-ஆம் தேதி அதிகரிக்கப்பட்டது. அதாவது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன் கூடுதலாக 480 இடங்கள் சோ்க்கப்பட்டன. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தோ்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக பிற்சோ்க்கை வாயிலாக அறிவிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு தோ்வாணையத்தின் இணையதளத்தில் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.