வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வங்கக்கடலில் காற்று சுழற்சி: தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்துக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை...

News image

கோப்புப்படம்

Updated On :26 செப்டம்பர் 2024, 9:05 am IST

அம்பாசமுத்திரம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நெருங்கும் நிலையில், செப். 28 முதல் தென் தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

“வங்க கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி, தமிழக கடற்கரையை நெருங்கும் நிலையில் செப்டம்பர் 28-ம் தேதி முதல் கிழக்கு திசை காற்று தற்காலிகமாக வீசத் துவங்கும்.

இதனால் செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்கள் சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம்.

எனவே, தென் தமிழக மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையுடன் (செப்.27) அறுவடைப் பணிகளை நிறுத்தி கொள்ளவும். தற்போது அறுவடைப் பணி நடைபெறும் இடங்களில் வியாழக்கிழமை (செப்.26) இரவும் அறுவடையைத் துரிதப்படுத்தி நிறைவு செய்யவும். ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட பயிர்களை மழையில் நனையாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தவும்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.